அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் நக்சல் தொடர்பு வாலிபர் கைது: கியூ பிரிவு போலீஸ் விசாரணை
கூடங்குளம்: நெல்லையில் நடந்த அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் நக்சல்களுடன் தொடர்புடைய வாலிபர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் நக்சல்கள் ஆதிக்கம் உள்ளதா என கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்க போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். கடந்த 19ம் தேதி கூடங்குளம் பகுதிகளில் 5,000 போலீசார் குவிக்கப்பட்டனர்.
சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் உத்தரவுப்படி தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ் தாஸ் தலைமையில் 4 டி.ஐ.ஜி.க்கள், 10க்கும் மேற்பட்ட எஸ்.பி.க்கள் கூடங்குளத்தில் முகாமிட்டனர். 54 கம்பெனி போலீசார், துணை ராணுவப்படை வீரர்கள் கூடயங்குளம் பகுதியில் முகாமிட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அணு மின் நிலையம் முன்பு கலவர தடுப்பு சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே நக்சல் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய முன்னாள் பொடா கைதி சேலத்தைச் சேர்ந்த சதீஷ் குமார்(35) நெல்லையில் அணு உலை எதிர்ப்புக் குழுவினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றபோது கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து நக்சல் அமைப்புக்கும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்குழுவிற்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க கியூ பிரிவு போலீசார் கூடங்குளத்தில் முகாமிட்டுள்ளனர். போராட்டத்தில் தீவிரம் காட்டிய இளைஞர்களுக்கு தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என தீவிர விசாரணை நடக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications