இந்திய ராணுவத்தின் நிலைமை படுமோசம்: பிரதமருக்கு ராணுவ தளபதி வி.கே.சிங் எழுதிய கடிதத்தால் சர்ச்சை

ஏற்கெனவே பிறந்தநாள் விவகாரம் , லஞ்சம் கொடுக்க முன்வந்தது என பல பஞ்சாயத்துகளை உருவாக்கியிருக்கும் வி.கே.சிங் இப்போது கிளப்பியிருக்கும் விவகாரத்தில் மத்திய அரசு குழப்பத்தின் உச்சத்தில் உறைந்துபோய்கிடக்கிறது.
கடந்த மார்ச் 12 ம் தேதி ராணுவ தளபதி வி.கே.,சிங் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில் நாட்டின் ராணுவ பாதுகாப்பு நிலையற்று இருப்பதாவும், எதிரிகளை சந்திக்க போதிய ஆயுதங்கள் இல்லாமல் சவால்களை சந்திக்க சிரமப்படுவதாகவும், இரவு நேரத்தில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
வான்வழி பாதுகாப்பு 97 விழுக்காடு மோசமாகவும், மேலும் நமது ராணுவ குறைபாட்டை களைந்திட வேண்டும் என்றும் ராணுவத்தை மேலும் நவீனப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த கடிதம் தொடர்பாக பதில் அளித்துள்ள ராணுவ இணை அமைச்சர் பல்லம் ராஜூ, இது குறித்து போதிய கவனம் செலுத்தி வருவதாகவும், தேவையான நிதியை ராணுவத்திற்கு அரசு வழங்கியிருப்பதாகவும் கூறினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., இது முக்கியமான விஷயமாக அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications