ராணுவ தளபதி வி.கே.சிங் மீது முன்னாள் துணை தளபதி தேஜிந்தர்சிங் மான நட்ட வழக்கு

ராணுவத்துக்கு தரம் குறைந்த வாகனங்கள் வாங்க ரூ.14 கோடி லஞ்சம் தர தன்னிடம் முன்னாள் துணை தளபதி தேஜிந்தர் சிங் பேரம் பேசினார். இதை நான் ஏற்கவில்லை என்று இந்திய ராணுவ தளபதி வி.கே. சிங் ஒரு பேட்டியின் போது கூறி இருந்தார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் இது அமளியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் தேஜிந்தர் சிங் மறுத்து இருக்கிறார். இதுதொடர்பாக அவர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வி.கே.சிங்குக்கு எதிராக மான நட்ட ஈடு வழக்கு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார். அதில் அவர், ராணுவ தளபதி வி.கே.சிங் தவறான கருத்தை பேசி இருக்கிறார். இதை அவர் திரும்பப் பெற வேண்டும். அவரை நான் 2010-ம் ஆண்டு செப்டம்பரில் தனிப்பட்ட முறையில்தான் சந்தித்து பேசினேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆடியே டேப்
இதனிடையே இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வி.கே.சிங்கை நேற்று இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தித்துப் பேசியுள்ளனர். மேலும் இந்த வழக்கின் முக்கிய உரையாடல் அடங்கிய ஆடியோ டேப் ஒன்றையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.












Click it and Unblock the Notifications