தெலுங்கானா விவகாரம்: நாடாளுமன்ற மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
டெல்லி: தெலுங்கானா தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திர மாநில எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் அலுவல் ஏதுமின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இன்று காலை அவை கூடியதும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, தெலுங்குதேசம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தெலுங்கானா விவகாரம் தொடர்பாக முழக்கங்களை எழுப்பினர்.
அமளிக்கிடையே பேசிய பாஜக தலைவர் சுஸ்மா ஸ்வராஜ், இந்த அவையில் பிரதமர் இருக்கிறார். அவை முன்னவரும் இருக்கின்றார். தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படுமா? இல்லையா? அல்லது தெலுங்கானா உருவாக்கப்படாது எனில் போராட்டக்காரர்களுடன் பேசுவீர்களா? தொடர்ந்து தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் குறைந்தபட்சம் தெலுங்கானா போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தையாவது அரசு நடத்துமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஆனால் தொடர்ந்தும் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி 3 கட்சி எம்.பிக்களும் முழக்கங்களை எழுப்பியதால் அவை நடவடிக்கைகளை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார்.
பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபோதும் இதே நிலைமை நீடித்தது. சபாநாயகர் இருக்கையில் இருந்த துணைத் தலைவர் கரிய முண்டா அவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.












Click it and Unblock the Notifications