உத்தரப் பிரதேசத்தில் கணவனை கொன்று பாத்ரூமில் புதைத்த பெண்

Subscribe to Oneindia Tamil

மீருட்: உத்தர பிரதேச மாநிலத்தில் கணவரைக் கொன்று பாத்ரூமில் புதைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பட்டேல்(40). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவரது மனைவி வர்ஷா(28). வர்ஷா தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2002ம் ஆண்டு பட்டேலை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பட்டேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்று தனது குடும்பத்தாருடன் மீருட்டில் செட்டிலானார்.

இந்நிலையில் வர்ஷா கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது கணவரைக் கொன்று பாத்ரூமில் புதைத்து தரையை பூசிவிட்டார். நேற்று பட்டேலின் நண்பர் ராஜேந்திர குமார் என்பவர் அவர்கள் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் பாத்ரூம் தரை புதுசாக பூசப்பட்டிருப்பதைப் பார்த்தார். வர்ஷாவிடம் தனது நண்பர் எங்கே என்று கேட்டார். அதற்கு அவர் சரியாக பதில் கூறாததால் சந்தேகமடைந்த குமார் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீசார் வர்ஷாவைப் பிடித்து விசாரித்ததில் அவர் தனது கணவரைக் கொன்று பாத்ரூமில் புதைத்துவிட்டதாகக் கூறினார். தரையைத் தோண்டி பார்த்தபோது பட்டேலின் சடலம் கிடைத்தது.

கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் வர்ஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+