ராஜீவ் கொலை கைதிகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் வேலூரிலிருந்து புழல் சிறைக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் இருந்து திடீரென சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 8.30 மணிக்கு அவர்கள் இருவரையும் பலத்த போலீஸ் காவலுடன் சென்னைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறை நிர்வாக வசதிக்காக அவர்கள் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications