''எல்லா கடையும் இருட்டுக் கடை தாங்க''.. தமிழக மின்வெட்டு குறித்து இல.கணேசன்

நிருபர்களிடம் அவர் பேசுகையில், தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவை துதிபாடுவதே முக்கிய இடம் பெற்றிருந்தது. மக்கள் எதிர்பார்த்த அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றம் அளித்திருக்கிறது.
வரிக்கு வரி, வரிக்கு வரி புரட்சித் தலைவி, புரட்சித் தலைவி என மூன்று மணி நேரம், கேட்கிற எனக்கே இவ்வளவு போர் அடிக்குமானால், சொல்கிறவர்களுக்கு போர் அடித்திருக்காதா?.
என்னைக் கேட்டால் சட்டசபையில் எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் ஒவ்வொரு முறையும் புரட்சித் தலைவி என்று சொல்லும் போதெல்லாம் ஒரு வரி விதித்தாலே இந்த பட்ஜெட்டில் இருக்கிற பற்றாக்குறையை சரி செய்திடலாம் என்று நினைக்கிறேன் என்றார்.
மின்வெட்டு குறித்து அவர் கூறுகையில், திருநெல்வேலியில் இருட்டுக்கடை அல்வா ரொம்ப விசேஷம். திருநெல்வேலியில் இப்போது போய் அல்வா வாங்க வேண்டும், இருட்டுக் கடை எங்கே இருக்கிறது என்று கேட்டால், என்ன விளையாடுறீங்க எல்லா கடையும் இருட்டுக் கடை தாங்க என்பார்கள் என்றார் இல.கணேசன்.












Click it and Unblock the Notifications