ஆந்திராவை மிரட்டும் பன்றிக்காய்ச்சல்: கர்ப்பிணி பலி, 28 பேருக்கு தீவிர சிகிச்சை
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பன்றிக் காயச்சலுக்கு கர்ப்பிணி ஒருவர் பலியாகியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் சுமார் 138 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்ததில் 28 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஹைதராபாத் ரசூல்புராவைச் சேர்ந்த சாந்தி (32) என்ற 6 மாத கர்ப்பிணியை கடந்த வாரம் பன்றி்க காய்ச்சல் தாக்கியது. இதையடுத்து அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.












Click it and Unblock the Notifications