தூக்கை நிறுத்தக் கோரி கொலையாளி மட்டுமே மனு செய்ய முடியும்: ரஜோனா வழக்கில் உச்சநீதிமன்றம்
டெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பல்வந்த்சிங் ரஜோனா எந்த ஒரு மனுவையும் தாக்கல் செய்யாத நிலையில் உத்தரவு எதனையும் பிறப்பிக்க முடியாது உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ரஜோனாவின் தூக்குத் தண்டனைக்கு எதிராக வழக்கறிஞர் அபினவ் ராமகிருஷ்ணா மற்றும் சர்வதேச மனித உரிமைப்பு வழக்கறிஞர்கள், தன்னார்வ அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். தாக்குர் மற்றும் கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தண்டனை பெற்றவர் எந்த ஒரு மனுவையும் தாக்கல் செய்யாத நிலையில் உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று கருத்துத் தெரிவித்தனர்.
இதையடுத்து தன்னார்வ அமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்பின் வழக்கறிஞர்கள் மனுவை திரும்பப் பெற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
மேலும் வழக்கறிஞர் அபினவ் மனு குறித்து கருத்துத் தெரிவித்த தாக்குர் பெஞ்ச், எவர் ஒருவர் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டது எனக் கருதுகிறாரோ அவர் மட்டுமே ஷரத்து 32-வது பிரிவின் கீழ் வழக்குத் தொடர முடியும் என்றும் இப்பிரிவின் கீழ் மனுத்தாக்கல் செய்துள்ள அபினவ்வின் எந்த ஒரு உரிமையும் மீறப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.












Click it and Unblock the Notifications