நாடாளுமன்ற மக்களவையை முடக்கியது தெலுங்கானா விவகாரம்- ஏப்ரல் 24க்கு அவை ஒத்திவைப்பு
டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் 5-வது நாளாக தெலுங்கானா விவகாரம் எதிரொலித்தது.
நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரின் முதல் பகுதி கூட்டத்தின் கடைசிநாளான இன்று காலை அவை கூடியதுமே தெலுங்கானா தனிமாநிலம் கோரி தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர். தெலுங்கானா மக்களின் உணர்வுகளை மத்திய அரசு மதித்து தெலுங்கானா தனிமாநில கோரிக்கையை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
தொடர் அமளியால் அவை நடவடிக்கைகள் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன. மீண்டும் அவை கூடியவுடன் முழக்கங்களும் தொடர அவையை ஏப்ரல் 24-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் மீரா குமார் அறிவித்தார்.
முன்னதாக அவையில் இருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான அமைச்சர் குலாம்நபி ஆசாத்துடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரின் 2-ம் பகுதி ஏப்ரல் 24-ந் தேதி தொடங்குகிறது












Click it and Unblock the Notifications