திமுகவினர் மீது நில அபகரிப்பு வழக்குகளை அரசு போடவில்லை: ஜெயலலிதா

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது திமுக உறுப்பினர் திராவிடமணி பேசும்போது, தனது கட்சியினர் மீதான நில அபகரிப்பு வழக்குகள் குறித்து அரசை குற்றம் சாட்டினார். அப்போது குறுக்கிட்டு முதல்வர் ஜெயலலிதா பேசுகையில்,
உறுப்பினரின் பேச்சு கன்னிப் பேச்சு என்பதால், சபையில் பல அமைச்சர்கள் பதில் சொல்ல எழுந்த போதும், குறுக்கிட வேண்டாம் என்று அவர்களை நான் அமர சொன்னேன். ஆனாலும் அவர் பல விஷமத்தனமான கருத்தை கூறுகிறார்.
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை என்றும், நில அபகரிப்பு வழக்குகளில் திமுகதலைவர்கள் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும் பழிவாங்கும் நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்படுவதாக கருத்து தெரிவித்தார்.
நான் இங்கு கூறிக் கொள்வது சட்டத்தின் ஆட்சி 5 ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் நடக்கிறது. நில அபகரிப்பு வழக்குகளை அரசு போடவில்லை. பாதிக்கப்பட்ட பொது மக்கள் போலீஸ் நிலையங்களை அணுகி புகார் அளிக்கின்றனர். அதன் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு போலீசார் விசாரித்து, பின்னர் தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் அரசு தலையீடு அடியோடு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications