பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மீதான குண்டாஸ் உத்தரவு ரத்து- உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோவையைச் சேர்ந்தவர் மார்ட்டின். பிரபல லாட்டரி வியாபாரி. இவர் கடந்த திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். இதன்மூலம் அரசு அதிகாரிகளின் வட்டாரத்தை சாதகமாக பயன்படுத்தி பெரும் பயன் அடைந்து வந்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நில மோசடி வழக்கு தொடர்பாக மார்ட்டின் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது மேலும் பல புகார்கள் வந்ததை தொடர்ந்து, போலீசார் மேலும் பல வழக்குகளை பதிவு செயது விசாரித்து வருகின்றனர்.
இதனையடுத்து லாட்டரி வியாபாரி மார்டினை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்குமாறு கோவை கலெக்டர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்ட்டின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு நீதிபதிகள் மோகன்ராம், அக்பர் அலி அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், மார்ட்டினை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க, கோவை கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications