சேலம் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
சேலம்: பாதுகாப்பு வசதிகள் செய்து தரக் கோரி சேலம் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாநகர அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் திடீர் என முற்றுகையிட்டனர்.
மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை பணிக்கு செல்வது இல்லை என்றும் அறிவித்துள்ளனர். துப்புரவு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு விட வேண்டும், தேசிய துப்புரவு ஆணையம் அறிவித்த ஊதியத்தை வழங்க வேண்டும் என்பதும் சேலம் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் கோரிக்கை.
துப்புரவுப் பணியாளர்களின் போராட்டத்தால் சேலம் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் பொது மக்கள் எதிர்பார்க்கி்ன்றனர்.












Click it and Unblock the Notifications