ஓய்வு பெற்றார் தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி லத்திகா சரண்!

தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி லத்திகா சரண். கடந்த 36 ஆண்டுகளாக காவல் துறையில் பல்வேறு பதவிகளை வகித்த அவர் இன்று தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். சென்னையில் இன்று அவருக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது. அதில் டிஜிபி ராமானுஜம் உள்பட ஏராளமான போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
லத்திகா சரண் கடந்த 1952ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி கேரள மாநிலம் இடுக்கியில் பிறந்தார். அவர் 1976ம் ஆண்டு ஐபிஎஸ் முடித்தார். ஏடிஜிபி, தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் பயிற்சி மற்றும் திட்ட இயக்குனர், லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.
அவர் 2006ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி கிரேட்டர் சென்னை மாநகர கமிஷனராக நியமிக்கப்பட்டார். கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் இந்தியாவின் இரண்டாவது பெண் டிஜிபி மற்றும் தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையைப் பெற்றார்.
அவர் சிபிஐ மற்றும் சிபிசிஐடி துறைகளிலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைகள்
லத்திகா சரண் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பதவியில் இருந்தபோது பல சர்ச்சைகளை சந்தித்தவர். அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. அந்த ஆட்சியின் கீழ் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது மிகப் பெரிய அளவில் வன்முறை வெடித்தது, பெரும் முறைகேடுகள் நடந்தன. இந்த சர்ச்சையில் லத்திகாவும் சிக்கினார்.
பின்னர் டிஜிபி பதவிக்கு நியமிக்கப்பட்டபோதும் லத்திகா சர்ச்ச்சையில் சிக்கினார். தன்னை விட ஜூனியரான லத்திகாவை டிஜிபியாக நியமித்ததை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தினார் அப்போது அவரை விட சீனியரான நடராஜ். இதுதொடர்பாக சட்டப் போராட்டம் வெடித்தது. இறுதியில் நடராஜ் வென்றார். ஆனால் அப்போது அவர் ஓய்வு பெற்றிருந்தார். இந்த நிலையில் லத்திகா தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
சர்ச்சைகளில் சிக்கினாலும் கூட நேர்மையான அதிகாரி என்ற பெயரைப் பெற்ற பெருமைக்குரியவர் லத்திகா என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications