உள்ளுந்தூர்பேட்டை அருகே மணல் கடத்தலை தடுத்த 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

Subscribe to Oneindia Tamil

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே மணல் கடத்திய லாரிகளை மடக்கி பிடித்த கிராம மக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

உளுந்தூர்பேட்டை பகுதியில் அதிக அளவில் மணல் கடத்தல் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் முற்றுகையிட்டனர்.

அப்போது அந்த வழியாக கடக்க முயன்ற 3 லாரிகளை பொது மக்கள் மடக்கி பிடித்து மணல் பர்மிட்டை காண்பிக்க வலியுறுத்தினர். ஆனால் லாரி ஓட்டுநர்கள் பர்மிட்டை காட்ட மறுத்ததால் லாரிகளை உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையின் போது, திருக்கோவிலூர் அருகே சிறுமதுரையில் இருந்து எலவனசூர்கோட்டைக்கு மணல் ஏற்றி வந்த ரசீதையும், மற்றொரு லாரி சிறுமதுரையிலிருந்து சேலத்திற்கு மணல் ஏற்றி செல்லும் ரசீதையும் போலீசாரிடம் ஓட்டுநர்கள் காண்பித்தனர்.

இதைத் தொடர்ந்து லாரி ஓட்டுநர் அறிவழகன் கொடுத்த புகாரின் பேரில் செங்குறிச்சியைச் சேர்ந்த பாலு, அயோத்தி, உதயகுமார், சவுந்தர், பாலமுருகன், அண்ணாமலை உட்பட 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+