ஏலக்காய் உள்ளிட்ட 7 விளைபொருட்களின் முன் பேர வர்த்தகத்திற்கு தடை வருமா?
மும்பை: ஏலக்காய், உருளைக்கிழங்கு உட்பட 7 விளைபொருட்களின் முன்பேர வர்த்தகத்துக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் ஏலக்காய் விலை 185 சதவீதமும், உருளைக்கிழங்கு விலை 170 சதவீதமும், புதினா எண்ணெய் விலை 172 சதவீதமும் உயர்ந்துள்ளது. கடுகு, உருளைக்கிழங்கு, சோயாபீன், கொண்டைக்கடலை, ஆகிய விளைபொருள்கள் விலை உயர்வதால் உணவு பணவீக்கம் அதிகரித்து, நுகர்வோர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
செயற்கையான முறையில் விலையை உயர்த்தும் வகையில், லாப நோக்கம் கருதி, ஊக அடிப்படையில் வர்த்தகம் நடைபெறுகிறதா என்பது குறித்து எஃப்.எம்.சி. ஆய்வு செய்து வருகிறது.
கொத்தவரங்காய் விலை கடந்த ஓர் ஆண்டு காலத்தில் 4 மடங்கு முதல் 9 மடங்கு வரை உயர்ந்தது. இதனையடுத்து, என்.சி.டீ.இ.எக்ஸ். முன்பேர சந்தையில் இதன் மீது வர்த்தகம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கொத்தவரங்காய் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் சந்தையில் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,500 குறைந்தது.
பொருள்கள் விலையில் ஏற்படும் திடீர் ஏற்ற, இறக்கங்களால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் முன்பேர வர்த்தகம் நடைபெறுகிறது. இதன்படி, ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட தேதியில், ஒரு நிர்ணயிக்கப்பட்ட விலையில் வாங்குவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு இரண்டு முதலீட்டாளர்கள் மத்தியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், சில முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி செயல்படுவதால், பொருள்கள் விலை செயற்கையான முறையில் உயருகிறது.
லாப நோக்கம்
ஏழு விளைபொருள்கள் விலை உயர்வுக்கு முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி செயல்பட்டதுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அந்த பொருள்களின் மீதான முன்பேர வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications