ஸ்பெகெட்ரம் அலைவரிசை: நீதிமன்றத்தில் எஸ்ஸார், லூப் நிறுவன அதிபர்கள் ஆஜர்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் வழக்கில் எஸ்ஸார் குரூப் மற்றும் லூப் டெலிகாம் நிறுவன அதிபர்கள் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று ஆஜராயினர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் எஸ்ஸார் குரூப் நிறுவனம் மற்றும் லூப் டெலிகாம் நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவன அதிபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக சி.பி.ஐ. நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டு இருந்தார்.
இதை ஏற்று எஸ்ஸார் குரூப் புரமோட்டர்கள் ரவி, அன்சுமான் ருயியா, லூப் டெலிகாம் புரமோட்டர்கள் ஐ.பி. கெய்தான், கிரன் கெய்தான் ஆகியோர் இன்று டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். அப்போது அவர்கள் தரப்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் மீதான விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு நீதிபதி சைனி ஒத்திவைத்தார்.
இவர்கள் மீது ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் ஆஜராக 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. அவர்களுக்கு நீதிபதி கடுமையான இறுதி எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து 4 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.












Click it and Unblock the Notifications