ரூ14 கோடி லஞ்ச பேர பின்னணியில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தேஜிந்தர்சிங்: சி.பி.ஐக்கு கொடுத்த புகாரில்
டெல்லி: ராணுவ வாகனங்கள் வாங்குவதற்காக தம்மிடம் பேரம் பேசியதன் பின்னணியில் ஓய்வ்8உபெற்ற ராணுவ அதிகாரி தேஜிந்தர் சிங் செயல்பட்டதாக ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
சி.பி.ஐ.யிடம் வி.கே.சிங் கொடுத்துள்ள புகாரில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்துக்கு தரம் குறைந்த வாகனங்கள் வாங்குவதற்காக ரூ14 கோடி தம்மிடம் லஞ்சம் தர முயன்றதாக வி.கே.சிங் தெரிவித்திருந்த புகார் பெரும் புயலை கிளப்பியது.
இதையடுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து எழுத்துப் பூர்வமான புகாரை வி.கே.சிங் நேற்று சி.பி.ஐயிடம் கொடுத்தார். அதில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தேஜிந்தர்சிங்தான் இந்த பேர பின்னணியில் இருந்து செயல்பட்டதாக சிங் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இந்த வழக்கில் தேஜிந்தர்சிங்கையும் சி.பி.ஐ. விசாரிக்க உள்ளது. ஆனால் வி.கே.சிங் விவகாரம் வெடித்தது முதலே தேஜிந்தர்சிங் பெயர் அடிபட்டு வருகிறது. அவரும் தம் மீதான புகாரை மறுத்ததுடன் வி.கே.சிங் மீது அவதூறு வழக்கையும் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வி.கே.சிங்குக்கு
இந்திய ராணுவத்திற்கு வாகனங்கள் வாங்குவது குறித்து தன்னிடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறிய ராணுவ தளபதி வி.கே. சிங், இந்த பேரம் பேசப்பட்டதில் ஓய்வு பெற்ற லெப்டினல் ஜெனரல் தேஜிந்தர் சிங பின்னணியாக இருந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தேஜிந்தர் சிங், தன்னைப் பற்றி அவதூறானத் தகவல்களைப் பரப்பி வருவதாக வி.கே. சிங் மற்றும் சில ராணுவ அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications