சொத்துக்குவிப்பு: ஜெகன்மோகன் ரெட்டி மீது குற்றப்பத்திரிகை - சிபிஐ அதிரடி

நெல்லூரை சேர்ந்த வக்கீல் சுதாகர் ரெட்டி என்பவர், உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார்.
அதில் ஜெகன்மோகன் ரெட்டி சொத்து குவிப்பதற்கு 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் ஆந்திர மந்திரிகள் பொன்னால லட்சுமய்யா, தர்மான பிரசாதராவ், கீதா ரெட்டி, சமீதா இந்திரா ரெட்டி, கன்னா லட்சுமி நாராயணா, மோபி தேவி வெங்கடரமணா ஆகியோர் உதவியாக இருந்துள்ளனர் எனக் கூறியிருந்தார்.
இவ் வழக்கை விசாரித்த நீதிபதிகள் தல்வீர், தீபக் மிஸ்ரா ஆகியோர் பொன்னால லட்சுமய்யா உள்ளிட்ட 6 மந்திரிகள், 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி மீது சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப் பத்திரிகை 68 பக்கங்களை கொண்டதாகும்.
இதே சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக மேலும் 12 பேர் மீதும் குற்றப்பத்திரிகை சி.பி.ஐ. தாக்கல் செய்தது.












Click it and Unblock the Notifications