'கடாபி' சங்கர் பிதரியை நீக்கிவிட்டு புது டிஜிபியாக இன்பான்ட்டை நியமிக்க கர்நாடக அரசு முடிவு!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தின் மிகக் கடுமையான கண்டனத்தைத் தொடர்ந்து தற்போதைய டிஜிபியான சங்கர் பிதரியை நீக்கிவிட்டு புதிய டிஜிபியாக இன்பான்ட்டை நியமிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்துறை அமைச்சர் ஆர். அசோகா, புதிய டி.ஜி.பியாக இன்பான்ட்டை நியமிக்க முதலமைச்சர் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
இருப்பினும் சங்கர்பிதரிக்கு ஆதரவாக கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அவர் கூறினார்.
டி.ஜி.பியாக சங்கர் பிதரியை நியமித்ததை எதிர்த்து இன்பான்ட் தொடர்ந்த வழக்கில், கடாபி, சதாம் உசேனைவிட படுமோசமான நபர் சங்கர் பிதரி என்று கண்டனத்தைப் பொழிந்திருந்தது கர்நாடக உயர்நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications