பஞ்சாப் பெண் அமைச்சர் ஜாகிர் கவுருக்கு 5 ஆண்டு சிறை
அமிர்தசரஸ்: ,மகளுக்கு கட்டாய கருக்கலைப்பு செய்த வழக்கில் பஞ்சாப் மாநில பெண் அமைச்சர் ஜாகிர் கவுருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையை சி.பி.ஐ. நீதிமன்றம் விதித்துள்ளது..
ஜாகிர் கவுர்
பஞ்சாப் மாநில பெண் முதல்வர் ஜாகிர் கவுர். இவருடைய மகள் ஹர்பிரீத் கவுர், 12 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்டார். இதுதொடர்பாகவும், கொலைக்கு முன்பாக, ஹர்பிரீத் கவுருக்கு வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாகவும், கடத்திச் சென்று அடைத்து வைத்ததாகவும் ஜாகிர் கவுர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இவ்வழக்கில், பாட்டியாலாவில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. பெண் அமைச்சர் ஜாகிர் கவுருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பல்பீர்சிங் உத்தரவிட்டார். கொலை குற்றச்சாட்டு மட்டும் நிரூபிக்கப்படவில்லை.
நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த ஜாகிர் கவுர், தீர்ப்பை கேட்டதும் கதறி அழுதார். அவர் உடனடியாக பாட்டியாலா மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். இவ்வழக்கில், மேலும் 3 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஒருவர் விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications