இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக பரதனுக்குப் பதில் சுதாகர்ரெட்டி தேர்வு
பாட்னா: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக எஸ். சுதாகர் ரெட்டி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக ஏ.பி. பரதன் கடந்த 1997-ம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் பாட்னாவில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுக் கூட்டத்தில் சுதாகர் ரெட்டி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.
மேலும் இகுழுக் கூட்டத்தில் புதிய தேசிய செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் ஏ.பி. பரதன், குருதாஸ் குப்தா, டி. ராஜா, அமரஜித் கெளர், அதுல் அன்ஜன், சமீம் பைஸி, ரவீந்திரன் மற்றும் ராமேந்திர குமார் ஆகியோர் செயற்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இதேபோல் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 31 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இரா. நல்லகண்ணு, தா. பாண்டியன், சுப்பராயன் உட்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 பேர் இடம்பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications