தெலுங்கானா தொடர்பாக கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லை: ப.சிதம்பரம்

உள்துறை அமைச்சகத்தின் மாதாந்திர அறிக்கையை டெல்லியில் வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்து மம்தா பானர்ஜி நேற்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அது குறித்த விரிவான விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த அமைப்பு குறித்து விவாதிக்க முதலமைச்சர்களின் கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 16-ந்தேதி நடத்தப்படும்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் முதல்வர்கள் மாநாடு நடக்கும். கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி நடக்க இருந்த கூட்டம் தேர்தல் மற்றும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் காரணமாக ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என நம்புகிறேன்.
தெலுங்கானா
ஆந்திராவின் முக்கிய அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக்கொள்ளுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்த அரசு தயாராக உள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்த கருத்து தெரிவிக்க 4 கட்சிகளே முன்வந்துள்ளது. மேலும் 4 கட்சிகள் கருத்து தெரிவிக்க மறுத்து வருகின்றன. ஆனால் இந்த விவகாரத்துக்காக இளைஞர்கள் தீக்குளிப்பது வருந்தத்தக்கது.
எம்.எல்.ஏ. கடத்தல்
எம்.எல்.ஏ.கடத்தல் விவகாரம் தொடர்பாக ஒடிசா முதல்வர் மத்திய அரசின் உதவியை கோரவில்லை. உளவுத்துறையின் தகவல்களை பகிர்ந்து கொள்வது குறித்து மட்டுமே கோரிக்கை வைக்கப்பட்டது.
ரஜோனா தூக்கு
பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் படுகொலை வழக்கில் ரஜோனாவுகு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரும் கருணை மனுக்களை சிரோன்மணி குருத்வ்ரா பிரபந்த கமிட்டியும் டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகமும் 2 நாட்களுக்கு முன்புதான் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தன. இதற்கு முன்னுரிமை கொடுத்து ஆராய்ந்து குடியரசுத் தலைவருக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரைக்கும் என்றார். கருணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டாலே தூக்கு தண்டனையை ஒருவருக்கு நிறைவேற்றக் கூடாது என்பது விதி. அதையே நாம் செய்தோம்.












Click it and Unblock the Notifications