கோடியக்கரையில் இலங்கை மீனவர்கள் இருவர் கைது !

Subscribe to Oneindia Tamil

வேதாரண்யம்: கோடியக்கரையில் படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் நேற்று மதியம் 2 மணியளவில் யமஹா என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. இதில் இலங்கையை சேர்ந்த 2 மீனவர்கள் இருந்தனர். இவர்களிடம் வேதாரண்யம் போலீசார், கடற்கரை போலீசார், கப்பற்படை முகாம் அதிகாரிகள் ஆகியோர் விசாரித்தனர்.

இதில் அவர்கள் இலங்கை பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. அந்தோணிப்பிள்ளை என்பவருக்கு சொந்தமான படகில் சிவாஜிபிரபு (28), தயாளன் (18) ஆகியோர் மீன் பிடிக்க வந்ததாகவும், கடலில் காற்று அதிகமாக வீசியதால் திசை மாறி இவர்கள் கோடியக்கரை பகுதியில் கரை ஒதுங்கியதாகவும் தெரிய வந்தது.

மேலும் எரிபொருள் தீர்ந்ததால் படகை மேற்கொண்டு செலுத்த முடியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இலங்கை மீனவர்கள சிவாஜிபிரபு, தயாளன் ஆகியோரை வேதாரண்யம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் அவர்கள் பயன்படுத்திய படகு, வலை, மற்றும 60 கிலோ மீன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+