தமிழர் வாழும் பகுதியில் புதிய ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்: இலங்கை அரசு அறிவிப்பு
கொழும்பு:இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகு, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு புதிய ரயில் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளுடன் நடந்த போரின் போது ராணுவ வீரர்கள் மனித உரிமைகளை மீறி கொடூரமாக நடந்து கொண்டனர். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. இதனால் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சர்வதேச நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் லக்ஷ்மண் யபா அபய்வர்தனே நேற்று கூறியதாவது:
இலங்கையின் வடகிழக்கு பகுதியையும் தெற்கு பகுதியையும் இணைக்கும் வகையில் புதிய ரயில் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. போரில் பாதிக்கப்பட்ட வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். கடந்த 30 ஆண்டுகளாக நடந்த போரில் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் நொறுங்கிய பாலங்களை மீண்டும் கட்டவும் அரசு உத்தரவிட்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications