சாதாராண உப்பு விற்க உள்ள தடைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

Subscribe to Oneindia Tamil

Ban on non Iodised salt
தூத்துக்குடி: தமிழகத்தில் சாதாரண உப்பு விற்க விதிக்கப்பட்டிருந்த தடைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்ட உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து தூத்துக்குடி தன்பாடு உப்பு உற்பத்தி வியாபாரிகள் சங்க தலைவர் தேன்ராஜ், செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் பொன்பாண்டியன் , சட்ட ஆலோசகர் சொக்கலிங்கம், உப்பு உற்பத்தியாளர் பீட்டர் ஜெபராஜ் ஆகியோர் கூறியதாவது:

கடந்த 2005ல் மத்திய அரசு அயோடின் கலந்த உப்பை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து சாதாரண உப்புக்கு தடை விதித்தது. இதனால் தமிழகத்தில் உப்பு உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.

இதை எதிர்த்து தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுபோல் மகராஷ்டிரா, குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் வழக்கு தொடரப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் வழக்குகளையும் ஒன்றாக இணைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் 6 மாதத்திற்குள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு பின்னரும் மத்திய அரசு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் என்ற பெயரில் அயோடின் உப்பு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று கட்டுபாடு விதித்தது.

இதையடுத்து தூத்துக்குடி தன்பாடு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இதில் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை அமுல்படுத்த 6 வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் அயோடின் கலக்காத உப்பு விற்பனை செய்யலாம் என்ற நிலை உருவாகியுள்ளதால் தூத்துக்குடி மாவட்ட உப்பு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+