கூடங்குளம் மின்சாரத்தை தமிழகத்துக்கே முழுவதும் வழங்க வேண்டும்: பிரதமருக்கு ஜெ கடிதம்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து முதலமைச்சர், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கூடங்குளம் அணு உலையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மின் உற்பத்தி மையங்களும் தலா 1000 மெகா வாட் மின்சாரத்தைத் தயாரிக்கக் கூடிய திறன் பெற்றவை. ஆக மொத்தம் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆனால், இதில் இருந்து தமிழகத்திற்கு வெறும் 925 மெகாவாட் மின்சாரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கடுமையான மின் தட்டுப்பாடு நிலவுவதால், கூடங்குளம் அணு உலை தயாரிக்கும் 2000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கே வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து தமிழகத்திற்கு சாதகமான முடிவினை அறிவிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் என முதல்வர் கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications