காற்றாலை மின் உற்பத்தி கடும் பாதிப்பு - அதிகாரிகள் அலட்சியம்

Subscribe to Oneindia Tamil

Wind Mill
பணகுடி: காற்றாலை மின் உற்பத்திக்குத் தேவையான குறைந்த அளவு மின்சாரம் கிடைக்காத காரணத்தினால் பணகுடியில் காற்றாலை மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதற்கு அதிகாரிகளின் அலட்சியப்போக்கே காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் பணகுடி சுற்றுவட்டார பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட 500 கிலோ வாட் திறன் கொண்ட காற்றாலைகள் உள்ளன. இந்த காற்றாலைகள் நொடிக்கு 5 மீட்டர் வேகத்தில் காற்று வீசினாலே மின் உற்பத்தி செய்ய தொடங்கும். அதே வேகத்தில் காற்று வீசினால் தினமும் 400 யூனிட் வரை காற்றாலை மின் உற்பத்தி செய்ய முடியும். அப்படி என்றால் தினமும் 400 காற்றாலைகள் 400 யூனிட் விதம் உற்பத்தி செய்தால் ஒரு லட்சத்து 60 ஆயிரம் யூனி்ட் மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதை கொண்டு பல பகுதிகளுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்கலாம். இந்த காற்றாலைகள் முதலில் இயங்க வைக்கும் மோட்டார்களுக்கு குறைந்த அளவு மின்சாரம் தேவைப்படுகிறது.

தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறையினால் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாமல் தொழிற்சாலைகளுக்கு கட்டாய வாரவிடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. காற்று வீசும் சமயத்தில் அதிகாரிகள் மின்தடையை ஏற்படுத்துவதால் காற்றாலை மின்சார உற்பத்தி செய்ய முடியாமல் போகிறது என்கின்றனர் உற்பத்தியாளர்கள். எனவே அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் மின் உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே காற்று வீசும் சமயத்தில் மின் உற்பத்தி செய்ய ஏதுவாக குறைந்த அளவு மின்சாரம் வழங்கவேண்டும் என்றம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+