பாலியல் பலாத்கார வழக்கில் ஆசிரியர் கைது: அவமானம் தாங்காமல் மனைவி தற்கொலை
சேலம்: டியூசன் படிக்க வந்த மாணவியை கற்பழித்த வழக்கில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இதனால் அவமானம் தாங்க முடியாமல் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த ஆரூர்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் கணேசன்(32). சின்னப்பம்பட்டியை சேர்ந்த இவருக்கும், தாரமங்கலம் 3வது வார்டை சேர்ந்த கலாவதிக்கும்(28) இடையே கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் கணேசனிடம் டியூசன் படிக்க வந்த கல்லூரி மாணவியை கற்பழித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் கணேசனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இத்தகவலை அறிந்த கலாவதி கடும் மனவேதனையில் தவித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அவர் தங்கி இருந்த அறையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கலாவதியின் தாயார் சுலோச்சனா, போலீசாரிடம் அளித்த புகாரில், தனது மகளின் தற்கொலைக்கு கணேசனும், அவரது 2 சகோதரிகளும் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தாரமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications