நடராஜனுடன் தொடர்பு: அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்!
திருவள்ளுர் : சசிகலாவின் கணவர் நடராஜனுடன் தொடர்பில் இருந்த சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கட்சியின் புகழுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட வடசென்னை மாவட்ட அதிமுக வக்கீல் பிரிவு துணை செயலாளர் ஆர். மதுரைவீரன் ஆர்.கே.நகர் பகுதி எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் ஆர். சூரியகுமார், தென் சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் எம். குணசேகரன் ஆகியோர் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
அதேபோல் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்ண்டி ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கே.எம்.எஸ். சிவக்குமார், திருவள்ளூர் தெற்கு மாவட்டம் அம்பத்தூர் நகர 51, வது வார்டு செயலாளர் வி. புகழேந்தி ஆகியோர் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சசிகலா கணவர் நடராஜனுடன் தொடர்புடன் இருந்ததால் தான் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications