இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வா? - விஜயகாந்த் கண்டனம்

மின் கட்டண உயர்வு குறித்து தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டை தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றுவேன் என்று சொன்ன முதலமைச்சர் கடந்த காலத்தில் மூன்று மணிநேரம் மின்வெட்டு என்பதற்கே ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று நடத்தினார்.
ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் மின்வெட்டு நேரம் என்பதுபோய், மின்சாரமே இல்லை என்ற நிலைதான் உள்ளது. மின்சாரத்தை கொடுத்துவிட்டு, சம்பாதிக்க வழி ஏற்படுத்தி தந்து மின்சாரக் கட்டணத்தை ஓரளவுக்கு உயர்த்தினால் கூட சமாளிக்கலாம். ஆனால் இன்று சம்பாதிக்க வழியும் இல்லை. அதே நேரத்தில் கொஞ்சம், நஞ்சம் தரும் மின்சாரத்திற்கு இருமடங்கு கூடுதல் கட்டணம் கட்டுங்கள் என்று கேட்பது என்ன நியாயம்?
விவசாயத்தையும், தொழில் துறையையும் இந்த மின் கட்டண உயர்வு அதலபாதாளத்திற்கு இட்டு செல்லக் கூடிய நிலையையே உருவாக்கியுள்ளது.
ஏழை, எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்படுகின்ற கடும் இழப்பை ஈடு செய்வதற்கு பதிலாக வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதைப் போல், மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளனர். ஏற்கனவே விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நொந்து போய் உள்ளனர். அத்தோடு மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ள நிலை கண்டு விவசாயத்தையே கைவிட்டு விடக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது தமிழக மக்களுக்கு சோதனை காலம் போலும். ஏற்கனவே உயர்ந்து வரும் விலைவாசி, வரலாறு காணாத பஸ் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, பத்திரப் பதிவுக்கான நில வழிகாட்டி மதிப்பு கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் பல்வேறு வரி உயர்வினால் விழி பிதுங்கி இருக்கும் நிலையில் இந்த மின் கட்டண உயர்வு மக்களால் தாங்க முடியாத அளவுக்கு பெரும் சுமையாக ஏற்றப்பட்டுள்ளது.
இதைத்தான் பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்றனர் போலும். இந்த அவலச் சூழ்நிலையை கருதி தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்," என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications