எதிர்ப்புகளை மீறி ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா!
Subscribe to Oneindia Tamil
பியாங்யாங்: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்புகளை மீறி வடகொரியா 2 ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தியுள்ளது.
வடகொரியா அடுத்த மாதம் ராக்கெட் ஏவப் போவதாக அறிவித்தது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ராக்கெட் ஏவும் திட்டத்தை கைவிடும்படியும், அதை மீறி நடந்து கொண்டால் உணவு வழங்கும் திட்டத்தை நிறுத்தப்போவதாகவும் அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது.
மேலும் இந்த விவகாரம் குறித்து சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் அடுத்த வாரம் ஆலோசனை நடத்த உள்ளன. இந்நிலையில் வடகொரியா குறைந்த தூரம் சென்று தாக்கும் 2 ஏவுகணைகளை ஏவி வெற்றிகரமாக சோதனை நடத்தியது. அந்நாட்டின் மேற்கு கடற்கரையில் இந்த ஏவுகணை சோதனை நேற்று முன்தினம் நடைபெற்றது என தென்கொரியா ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications