தமிழகத்தில் அதிகரிக்கும் வாக்கிங் கொலைகள்... நடக்கவே அஞ்சும் அரசியல் பிரபலங்கள்!

திருச்சியில் வாக்கிங் போனபோது முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்திக் கொல்லப்பட்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் வாக்கிங் போனபோது கடத்தப்படவில்லை என்றும் முதல் நாள் இரவே கடத்திப் போய் விட்டார்கள் என்றும் புதுச் செய்தி உலவ ஆரம்பித்துள்ளது. இருப்பினும் வாக்கிங்கின்போது கடத்திக் கொல்லப்பட்டார் என்பது அரசியல்வாதிகளிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வாக்கிங் போனபோது கடத்தப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தமிழகத்திற்குப் புதிதல்ல. ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
கடந்த 2001ம் ஆண்டு சென்னையில் திமுகவைச் சேர்ந்த பிரமுகர் பாலன் இப்படித்தான் தனது மயிலாப்பூர் வீட்டிலிருந்து வாக்கிங் சென்றோது கடத்தப்பட்டார். பின்னர் அவரைக் கொன்று உடலையும் எரித்து விட்டனர். நீண்ட காலம் கழித்துத்தான் இந்தக் கொலையும், உடல் எரிப்பும் போலீஸாருக்குத் தெரிய வந்தது.
அதேபோல தமிழகத்தை உலுக்கிய இன்னொரு வாக்கிங் படுகொலை மதுரையில் நடந்த தா.கிருட்டிணன் படுகொலை. இது ஒரு அரசியல் படுகொலையாகும். கொலைக்கான காரணம் தமிழகம் அறிந்ததே. திமுகவில் முக்கியப் புள்ளியாக விளங்கியவர் தா.கி. மதுரை அண்ணா நகரில் வசித்து வந்தார்.
கடந்த 2003ம் ஆண்டு இவர் காலையில் வாக்கிங் சென்றபோது கொடூரமாக வெட்டிச் சாய்க்கப்பட்டார். மதுரையை மட்டுமல்லாமல் தமிழகத்தையே உலுக்கிய மிகப் பெரிய படுகொலை இது. உட்கட்சிப் பூசல் காரணமாக நடந்த கொலை இது என்று அப்போது கூறப்பட்டது.
அதேபோல 2004ம் ஆண்டு இன்னொரு முக்கிய திமுக பிரமுகரான ஆலடி அருணாவும் இதேபோலத்தான் வாக்கிங் போனபோது படுகொலை செய்யப்பட்டார்.
தனது நண்பரான ஆசிரியர் பொன்ராஜ் என்பவருடன் தனது சொந்த ஊரில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தபோது அருணாவை வெட்டிக் கொலை செய்தனர். பொன்ராஜும் படுகொலை செய்யப்பட்டார். இது தொழில்போட்டி காரணமாக நடந்ததாக கூறப்பட்டது.
இப்போது ராமஜெயம் கொலை செய்யப்பட்டுள்ளார். இப்படி அரசியல்பிரமுகர்கள் வாக்கிங் செல்லும்போது குறி வைக்கப்படுவது அதிகரிக்க ஆரம்பித்திருப்பதால் அரசியல்வாதிகளிடையே பெரும் சலசலப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
உரிய பாதுகாப்பு இல்லாமல், வாக்கிங் போவது உகந்தது அல்ல என்ற முடிவுக்கு அரசியல் பிரமுகர்கள் வரத் தொடங்கியுள்ளனர். மேலும் முடிந்தவரை பாதுகாப்பான சூழலில் வாக்கிங் போகவும் அவர்கள் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
மயிலை பாலன், ஆலடி அருணா, தா.கி, ராமஜெயம் ஆகிய படுகொலைச் சம்பவங்களில் உள்ள வேதனையான ஒற்றுமை என்னவென்றால் நால்வருமே திமுகவினர் என்பதுதான்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications