இன்னொரு நில மோசடி வழக்கிலும் நடராஜனுக்கு ஜாமீன்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: நில அபகரிப்பு வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.

தஞ்சையை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், நில அபகரிப்பு வழக்கில் நடராஜன் கைது செய்யப்பட்டார். இது தவிர பண மோசடி வழக்கு உட்பட நடராஜன் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ராமலிங்கம் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடராஜனுக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே ஜாமீன் வழங்கியுள்ளது.

இந் நிலையில் தஞ்சாவூரில் வின்‌சென்ட் ஆல்பர்ட் என்பவரின் நிலத்தை அபகரித்ததாக நடராஜன் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கிலும், பண மோசடி வழக்கிலும் ஜாமீன் கேட்டு நடராஜன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கேட்டு நடராஜன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி வின்சென்ட் ஆல்பர்ட் வழக்கில் நடராஜனுக்கு ஜாமீன் வழங்கினார். ஆனால், மற்ற வழக்குகளில் ஜாமீன் கிடைக்காதவரை அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+