குஜராத்திலிருந்து தமிழகத்துக்கு 200 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கும்!

எரிசக்தி கொள்கை தொடர்பான கருத்தரங்க தொடக்க விழா சென்னையில் நடந்தது. அதில் அவர் பேசுகையில், தமிழகத்தின் மின் பற்றாக்குறையைப் போக்குவதற்காக குஜராத்திடம் இருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசு கோரியுள்ளது. ஆனால், தென் மண்டல மின் கிரிட்டுடன் மத்திய கிரிட்டை இணைக்கும் பணி இன்னும் முடியாததால் இப்போதைக்கு 200 மெகாவாட் மட்டுமே கிடைக்கும்.
இப்போது மகாராஷ்டிரத்தில் உள்ள சோலாப்பூர், கர்நாடகத்தில் உள்ள ராய்ச்சூர் இடையே புதிய மின் கிரிட் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு, தென் மாநிலங்கள் நாட்டில் உள்ள பிற மின் தொகுப்புகளோடு இணைக்கப்படும். இந்த இணைப்புக்குப் பிறகு தமிழகத்துக்கு குஜராத்திடம் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் முழுமையாகக் கிடைக்கும் என்பதால், அப்போது மின் பற்றாக்குறை தீர வாய்ப்புள்ளது.
மேலும் இந்த புதிய கிரிட் இணைப்புப் பணிகள் முடிந்துவிட்டால் குஜராத் மட்டுமின்றி பிற மின் மிகை மாநிலங்களும் கூட தமிழகத்துக்கு மின்சாரம் வழங்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications