இன்று புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
சென்னை: இன்று புனித வெள்ளி நாளை முன்னிட்டு தேவாலயர்ங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கின்றன.
ஏசுநாதர் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். பின்பு அவருக்கு யுதேயா நாட்டு மன்னன் பிலாத்துவால் மரண தண்டனை விதித்தான். இதையடுத்து ஏசுநாதர் தலையில் முள்கிரீடம் வைத்து அவரை ஜெரூசலமில் இருந்து கொல்கதா மலை வரை தோளில் சிலுவையைச் சுமந்தவாறே இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவரை மலை உச்சியில் சிலுவையில் அறைந்து கொன்றனர்.
ஏசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவ மக்கள் புனித வெள்ளியாக அதாவது துக்க நாளாக கடைபிடிக்கிறார்கள். புனித வெள்ளியன்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படும். அதிலும் குறிப்பாக மதிய வேளையில் நடக்கும் பிரார்த்தனையின்போது ஏசுநாதர் சிலுவையைச் சும்ந்து சென்றபோது கூறிய 7 திருவசனங்களை மையாக வைத்து பாதிரியார்கள் அருளுரை வழங்குவார்கள்.
சில கிறிஸ்தவர்கள் ஒரு வேளையும், சிலர் 2 வேளையும், இன்னும் சிலர் 3 வேளையும் சாப்பிடாமல் நோன்பு இருப்பார்கள். புனித வெள்ளி அன்று பல தேவாலயங்களில் பிஷப்புகள், பாதிரியார்கள் ஏசுநாதர் சிலுவையைச் சுமந்து சென்றதை நினைவுகூறும் வகையில் தாங்களும் சிலுவையைச் சுமந்து சிலுவைப் பாதை என்று கூறி பவனி வருவார்கள்.
ஆங்கிலத்தில் குட் பிரைடே என்றும் தமிழில் புனித வெள்ளி, பெரிய வெள்ளி என்று கூறப்படும் இந்நாள் துக்கநாளாக கடைபிடிக்கப்படுகிறது. இன்று கொல்லப்பட்ட ஏசுநாதர் 3 நாட்கள் கழித்து அதாவது ஞாயிற்றுக்கிழமை உயிர் பெற்று வருவதை ஈஸ்டர் பண்டிகையாக மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications