அரசு விரைவு பேருந்துகளில் எக்ஸ்ட்ராவாக 7 சீட்கள்: 100 புதிய பேருந்துகள் அறிமுகம்

Subscribe to Oneindia Tamil

TN Govt Bus
சென்னை: புதிதாக விடப்பட்டுள்ள தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் கூடுதலாக 7 இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் வழக்கமாக செல்லும் 36 பேருக்கு பதில் 43 பேர் பயணம் செய்யலாம்.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 100 பேருந்துகள் வாங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் முடிந்து படிப்படியாக பேருந்துகள் வருகின்றன. ஏற்கனவே உள்ள அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் மோசமான நிலைமையில் இருப்பதால் அதற்கு பதிலாகத் தான் இந்த புதிய பேருந்துகள் விடப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே உள்ள பேருந்துகளில் 36 இருக்கைகள் தான் உள்ளன. ஆனால் தற்போது வந்து கொண்டிருக்கும் புதிய பேருந்துகளில் கூடுதலாக 7 இருக்கைகள் பொருத்தப்பட்டு மொத்தம் 43 இருக்கைகள் உள்ளன. இதனால் கூடுதலாக 7 பேர் பயணிக்க முடியும்.

புதிய பேருந்துகள் ஏற்கனவே உளள் பேருந்துகளை விட நீளமாக உள்ளன. அதன் நீளம் 12 மீட்டர் ஆகும். இருக்கைகள் அதிகரிக்கப்பட்டதன் மூலம் போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

பயணிகள் நிம்மதியாக பயணிக்க சொகுசு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் கூறுகையில்,

அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 100 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. அதில் 25 பேருந்துகள் புதிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம்- திருப்பதி, கடலூர்-திருப்பதி, கடலூர்-திருவனந்தபுரம், கல்பாக்கம்- நாகர்கோவில், சென்னை-வேடச்சந்தூர் உள்ளிட்ட பல புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் கூடுதலாக 7 இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளதன் மூலம் வருவாய் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+