பிரணாப் உறுதியளித்ததால் நகைக்கடைக்காரர்கள் போராட்டம் வாபஸ்!

மத்திய பட்ஜெட்டில் தங்க நகைகள் மீது இறக்குமதி வரி 2 சதத்தில் இருந்து 4 சதவிகிதமாகவும், கலால் வரியாக ஒரு சதவிகிதமும் ,உயர்த்தப்பட்டுள்ளது. விற்பனைவரி 4 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 லட்சத்திற்கு மேல் தங்கம் வாங்குவோர் தங்களுடைய பான் கார்டை காண்பிக்க வேண்டும் என்று புதிய உத்தரவும் போடப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு தங்க விற்பனையை பாதிப்பதுடன், தங்கம் வாங்குவோரும் கடுமையாக பாதிக்கப்படுவர்.
இதை எதிர்த்து நாடு முழுவதும் நகைக்கடைகள் தொடர்ந்து அடைக்கப்பட்டன. நகைக்கடை உரிமையாளர்கள் மிகப்பெரிய போராட்டத்தை அறிவித்தனர். அடகுக்கடை உரிமையாளர்களும் இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில், பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நகைக்கடை உரிமையாளர்களின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தார். டெல்லியில் இன்று நிதி அமைச்சர் பிரணாப்புடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அழைப்பை ஏற்று இந்தியா முழுவதும் உள்ள தங்க நகைக்கடை சங்க பிரதிநிதிகள் 12 பேர், டெல்லியில் அவரை சந்தித்தனர்.நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து தேசியளவில் நடைபெற்ற 20 நாள் மற்றும் மற்றும் தமிழக அளவில் 3 நாள் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications