காவிரி நதி நீர் நடுவர் மன்றத் தலைவர் என்.பி.சிங் ராஜினாமா
டெல்லி: காவிரி நதி நீர் நடுவர் மன்றத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து நீதிபதி என்.பி.சிங் ராஜினாமா செய்துள்ளார். உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் ராஜினாமா செய்துள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த இவர் கடந்த 1996ம் ஆண்டு இந்த நடுவர் மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 16 ஆண்டுகளாக இந்த நடுவர் மன்றத் தலைவராக இருந்தார்.
இந்த நடுவர் மன்றம் தான் கடந்த 1991ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி தனது இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில், தமிழகத்துக்கு கர்நாடகம் ஆண்டுதோறும் 205 டிஎம்சி காவிரி நீரை தர வேண்டும், புதுச்சேரிக்கு 6 டிஎம்சி நீரைத் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவை அமலாக்க காவிரி நீர் ஆணையம் 1998ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்த மன்றம் கடந்த 2007ம் ஆண்டிலேயே தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்துவிட்டது. ஆனால், அதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால், நடுவர் மன்றத்தின் காலமும் நீட்டிக்கப்பட்டது.
தனது இறுதி அறிக்கையில், தமிழகத்துக்கு ஆண்டுதோறும் கர்நாடகம் 419 டிஎம்சி நீரையும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரையும், கேரளத்துக்கு 30 டிஎம்சி நீரையும் தர வேண்டும் என்று உத்தரவிட்டது. கர்நாடகம் 270 டிஎம்சி நீரை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதித்தது.
இதை எதிர்த்து தமிழகம், கர்நாடகம் ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் காவிரி நதி நீர் நடுவர் மன்றத் தலைவர் என்.பி.சிங் ராஜினாமா செய்துள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications