இலங்கை கடல் எல்லையை கண்காணிக்க ராமநாதபுரத்தில் ஆளில்லா உளவு விமானப்படை

இலங்கை விவகாரங்களில் சீனாவின் தலையீடு அதிகரித்துள்ளதால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதையடுத்து இந்தியா-இலங்கை கடல் எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த இந்தியா முடிவு செய்தது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் புதிய ஆளில்லா விமானப் படையை இந்தியா நிறுவியுள்ளது.
முதல் கட்டமாக கடல் பகுதியை மிகத் துல்லியமாக படம்பிடிக்கும் திறன் கொண்ட 3 ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்.
ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வநத் தீர்மானத்தை எதிர்த்து சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் வாக்களித்தன. ஆனால் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. தங்களுக்கு எதிராக வாக்களிக்கும் உரிமை இந்தியாவுக்கு உண்டு என்று இலங்கை கூறினாலும் அது மறைமுக எச்சரிக்கைகளை விடுத்து தான் வருகிறது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இலங்கை கடல் பகுதியை கண்காணிக்க இந்தியா தற்போது ஆளில்லா விமானப் படையை நிறுவியுள்ளது.












Click it and Unblock the Notifications