அடுத்தவர் நிலத்தில் அத்துமீறி நுழைந்தது வேலியை சேதப்படுத்தியதாக எஸ்.ஏ. ராஜா மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: பணகுடி அருகே நிலத்தில் அத்துமீறி நுழைந்து வேலி சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்வி நிறுவன உரிமையாளர் எஸ்.ஏ.ராஜா, கல்லூரி ஊழியர்கள் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

களக்காடு அருகே கோவில்பத்து யாதவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மதார் முகைதீன் (41). இவர் காவல்கிணறு பகுதியில் நிலம் கிரையம் வாங்கி உள்ளார். இந்த நிலம் தொடர்பான சிவில் வழக்கு வள்ளியூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், 11ம்தேதி இரு வாகனங்களில் வந்தவர்கள் நிலத்தில் இருந்த முள்வேலி, ஓலைப்பந்தல் கட்டடத்தை சேதப்படுத்தி விட்டு சென்றனர். சேத மதிப்பு 15 ஆயிரம் ரூபாய். சிலர் தூண்டுதலின் பேரில் இச்சம்பவம் நடந்ததாக மதார் முகைதீன் பணகுடி போலீசில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆசீர்வாதம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வடக்கன்குளம் கல்வி நிறுவன உரிமையாளர் எஸ்.ஏ.ராஜா, அவர் மகன் ஜீசஸ்ராஜா, கல்லூரி ஊழியர்கள் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆலடி அருணா கொலை வழக்கிலிருந்து சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டவர் எஸ்.ஏ. ராஜா என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+