For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி விவகாரம்: 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் - சதானந்த கவுடா

By Shankar
Google Oneindia Tamil News

sadananda gowda
பெங்களூர்: காவிரி நீர் பிரச்சினை குறித்து விவாதிக்க வருகிற 19 ந் தேதி (வியாழக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.

பெங்களூரில் செய்தியாளர்களிம் பேசிய அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களின் வசதி வாய்ப்பை அனுசரித்து டெல்லிக்கு குழு ஒன்றை அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

தமிழகத்துக்குத் தேவையான நேரத்தில் காவிரியில் தண்ணீர் விடுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.

கர்நாடகத்தில் தேர்தல் நெருங்குவதால், இந்தப் பிரச்சினையை வைத்து அவரவர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கத் தொடங்கியுள்ளன.

English summary
Karnataka chief minister Sadananda Gowda has called for an all party meeting to discuss on Cauvery issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X