குடும்ப தகராறு கலெக்டர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி
கோவை: கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியல் அலுவலகத்தில் பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை அருகே உள்ள மாதம்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மரகதவல்லி(45) இவர்களுக்கு, 21 வயதில் மகனும், 16 வயதில் மகளும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக கார்த்திக்கேயன் வீட்டுக்கே வருவதில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த மரகதவல்லி, கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரி தனது இடிப்பில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் சாணிப்பவுடரை எடுத்து குடித்தார்.
இதை கவனித்த போலீசார், அவரை உடனே காப்பாற்றி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.