For Daily Alerts
Just In
திவாகரனுக்கு 3வது வழக்கில் ஜாமீன்
சென்னை: கொலை மிரட்டல் வழக்கில் சசிகலா தம்பி திவாகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ரிஷியூரில் சோம தமிழார்வன் என்பருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தற்போது திவாகரனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. நீடாமங்கலம் காவல்நிலையத்தில் திவாகரன் தினமும் கையெழுத்திட நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
3 வழக்கில் ஜாமீன்
திவாகரன் மீது மொத்தம் 5 வழக்குகள் போடப்பட்டன. இதில் ஏற்கெனவே திவாகரனுக்கு 2 வழக்குகளில் ஜாமீன் கிடைத்திருந்தது. தற்போது ஒரு வழக்கில் ஜாமீன் பெற்றுள்ளார்.
இன்னமும் 2 வழக்குகளில் ஜாமீன் பெறவேண்டும். இதில் நீடாமங்கலம் அரசு நிலம் அபகரிப்பு வழக்கில் திவாகரன் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
English summary
The Madras High Court granted bail to Sasikala's borther Divakaran in a death threat case.
Story first published: Monday, April 16, 2012, 18:49 [IST]