விஜயகாந்த்தைத் தொடர்ந்து தேமுதிக கொறடா மீது நடவடிக்கை பாய்கிறது!

Subscribe to Oneindia Tamil

VC Chandrakumar
சென்னை: தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிந்துரை செய்யுமாறு சட்டசபை உரிமைக் குழுவுக்கு சபாநாயகர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபையில் கடந்த கூட்டத் தொடரின்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது உரிமைக் குழு மூலம் 10 நாள் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் 10 நாட்களுக்கு அவரால் வர முடியவில்லை. தண்டனைக் காலம் முடிந்தும் கூட வராமல் இருக்கிறார் விஜயகாந்த்.

இந்த நிலையில் தற்போது தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார் சிக்கலில் மாட்டியுள்ளார். விஜயகாந்த்துக்கு கொடுக்கப்பட்ட அறையைப் பங்கு பிரித்து காங்கிரஸுக்கு ஒரு பகுதியை ஒதுக்கி விட்டனர். இதனால் தேமுதிக உறுப்பினர்கள் சட்டசபையில் பிரச்சினை கிளப்பி வருகின்றனர்.

இதுதொடர்பாக பேட்டி அளித்த கொறடா வி.சி.சந்திரகுமார் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். இதை இன்று சபாநாயகர் கவனத்திற்குக் கொண்டு வந்த அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், சந்திரகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்ற சபாநாயகர் ஜெயக்குமார், இதுகுறித்து பரிந்துரைக்குமாறு உரிமை மீறல் குழுவுக்கு உத்தரவிட்டார். இதனால் சந்திரக்குமார் மீதும் சஸ்பெண்ட் நடவடிக்கை பாயலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+