காஷ்மீருக்கும், தனி தமிழ் நாடுக்கும் கூட 'ரெபரண்டம்' வைக்கலாமே- சம்பிகே கொழுப்புப் பேச்சு!

Subscribe to Oneindia Tamil

Minister Ranawaka
கொழும்பு: தமிழ் ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறுவதைப் போல காஷ்மீருக்கும், திராவிட நாடுக்கும் கூட பொது வாக்கெடுப்பு நடத்தலாம். முதலில் காஷ்மீருக்கு நடத்தி விட்டு பிறகு தனித் தமிழ்நாடு கோரும் திராவிட நாடுக்கும் வாக்கெடுப்பு நடத்தலாம் என்று கொழுப்புத் தனமாக பேசியுள்ளார் இலங்கை அமைச்சர் சம்பிகே ரணவக்க.

தமிழ் ஈழம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ள வார்த்தைகளை கிண்டலடித்து இந்த ரணவக்கே பேசுகையில், திராவிட நாடு பற்றிப் பேசிய கட்சியைச் சேர்ந்தவர்தான் கருணாநிதி. அவரது ஆசைப்படி தனித் தமிழ்நாடு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தலாம். இதற்காக தமிழ்நாட்டில் தனி வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யலாம்.

மேலும், காஷ்மீரை தனி நாடாக்குவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்துமாறு இந்திய அரசை கருணாநிதி கேட்டுக் கொள்ளலாம். ஏற்கனவே 1948ம் ஆண்டு ஐ.நா. சபையில் இதுதொடர்பாக தீர்மானம் கூட நிறைவேற்றப்பட்டது. எனவே காஷ்மீரை தனி நாடாக்குவது எளிதான ஒன்றுதான்.

எனவே இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்குவது குறித்துப் பேசும் முன்பு காஷ்மீர், தனி தமிழ்நாடு குறித்து கருணாநிதி முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உளறியுள்ளார் ரணவக்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+