மாயமான பிள்ளைகளை மீட்டுக் கொடுங்களேன்- இந்திய குழுவிடம் மன்றாடிய தமிழர்கள்

பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு கடந்த 16ம் தேதி இலங்கைக்கு புறப்பட்டு சென்றது. அவர்கள் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் போருக்குப் பின் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் சென்றபோது அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகள் பிரமிக்க வைப்பதாக உள்ளது என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் இந்திய அரசு கட்டியுள்ள 150 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை எம்.பி.க்கள் குழு திறந்து வைத்தது. மேலும் 100 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் மருத்துவமனையை பார்வையிட்டது.
இந்நிலையில் அந்த குழுவினர் மெனிக்பாம் முகாமிற்கு சென்று அங்குள்ள தமிழர்களை சந்தித்து பேசினர். அப்போது அந்த முகாமில் தங்கியுள்ளவர்கள் கூறுகையில்,
விசாரணை என்ற பெயரில் எங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்றனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள், உயிருடன் தான் இருக்கிறார்களா என்பது கூடத் தெரியவில்லை. எனவே, பாவப்பட்ட எங்கள் மீது இரக்கம் கொண்டு எங்கள் பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள் என்று அவர்கள் இந்திய குழுவிடம் கோரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications