சென்னையில் 4 அசிஸ்டண்ட் கமிஷனர்கள் அதிரடி மாற்றம: கோயம்பேடுக்கு தனி ஏ.சி.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உதவி போலீஸ் கமிஷனர்கள் 4 பேரை அதிரடியாக மாற்றம் செய்து தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை திருவொற்றியூர் உதவி கமிஷனராக இருந்த சங்கரலிங்கம், வடபழனி உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். வடபழனி உதவி கமிஷனர் ஸ்ரீனிவாசன் கோயம்பேடு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரவாயல் உதவி கமிஷனர் ஐயப்பன் எஸ்.ஆர்.எம்.சி. உதவி கமிஷனராகவும், சென்னை பயிற்சி மற்றும் நவீனமயமாக்கல் உதவி கமிஷனர் சந்திரசேகரன் வளசரவாக்கம் உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில் திருமங்கலம் உதவி கமிஷனரின் கட்டுப்பாட்டில் இருந்த கோயம்பேடு தனியாக பிரிக்கப்பட்டு புதிதாக உதவி கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications