நெல்லையில் பெண் எல்.ஐ.சி. ஏஜெண்டை கடத்தி சீரழித்த ஆட்டோ டிரைவர்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: விஜயநாராயணம் அருகே பெண் எல்.ஐ.சி. ஏஜெண்டை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே உள்ள கழுவூர் கிராமத்தைச் சேர்ந்த தேவநாதன் மனைவி பியூலா ஜீவரத்தினம். எல்.ஐ.சி. ஏஜெண்ட். அவர் எல்.ஐ.சி. அலுவலகம் சென்றுவிட்டு பேருந்தில் பரப்பாடி வந்தார். அங்கிருந்து ஊருக்கு செல்ல ஒரு ஆட்டோவை அமர்த்தினார். ஆட்டோ புறப்பட்ட சிறிது நேரத்தில் கழுவூருக்கு செல்லாமல் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்றது. இதைப் பார்த்த பியூலா ஆட்டோவை ஏன் இப்படி வேறு பாதையில் கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது ஆட்டோ டிரைவர் அவரை மிரட்டி அங்குள்ள காட்டுப் பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அவரிடமிருந்து தப்பி வந்த பியூலா விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் லிங்கதிருமாறன் விசாரணை நடத்தி விஜயநாராயணம் அருகே உள்ள வடிவாள்புரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் ஆட்டோ டிரைவர் மகேஷ் என்பவரை கைது செய்தார். அவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பியூலாவுக்கு இன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+