திருமணத்திற்கு வற்புறுத்தியதால் காதலியைக் கொன்று வீட்டு வாசலில் புதைத்த ஏட்டைய்யா மகன்
மதுரை: தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய காதலியைக் கொன்று வீட்டு வாசலில் புதைத்த ஏட்டு மகனை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே வசித்து வருபவர் பொன்னுச்சாமி. மேலூர் காவல் நிலையத்தில் ஏட்டாக உள்ளார். அவரது மகன் பாபு. கல்லூரியில் 3ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வருகிறார். மதுரை குலமங்கலம் அருகே உள்ள வடுகபட்டியைச் சேர்ந்த ஞானசேகர் மகள் கஸ்தூரி (21). அவர் உசிலம்பட்டியில் உள்ள விளையாட்டு சாதனங்கள் விற்கும் கடையில் வேலை செய்து வந்தார்.
விளையாட்டு சாதனங்கள் வாங்க அந்த கடைக்கு சென்றபோது பாபுவும், கஸ்தூரியும் நண்பர்களாகியுள்ளனர். நாளடைவில் நட்பு காதலாகி இருவரும் நெருங்கிப் பழகினர். இதையடுத்து கஸ்தூரி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு பாபுவை வற்புறுத்தி வந்தார். இதற்கிடையே கடந்த 20 நாட்களுக்கு முன்பு கஸ்தூரி வேலைக்கு வருவதை நிறுத்திவிட்டார்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி முதல் அவரை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் கூடல் நகர் போலீசில் அவரது பெற்றோர் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் கஸ்தூரியின் கைப்பையை சோதித்தபோது அதில் பாபு என்ற பெயரில் நகை அடகு வைத்த ரசீது இருந்தது. அதைக் கைப்பற்றி பாபுவைத் தேட ஆரம்பித்தனர். இதையறிந்த பாபு சீமானூத்து நிர்வாக அலுவலர் பால்பாண்டியிடம் சரண் அடைந்தார். பின்னர் அவர் உசிலம்பட்டி டவுன் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையில் தெரிய வந்த விபரம் வருமாறு,
பாபு கஸ்தூரியுடன் பல முறை உல்லாசமாக இருந்து வந்துள்ளார். கஸ்தூரி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தவே பாபு அவரைவிட்டு விலகத் தொடங்கினார். இந்த விவகாரம் யாருக்கும் தெரியாமல் இருக்க கஸ்தூரியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். கடந்த 8ம் தேதி தான் மட்டும் வீட்டில் இருந்தபோது கஸ்தூரியை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அங்கு அவர் கஸ்தூரியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அநத பெண்ணை கழுத்தை நெறி்ததுக் கொன்று வீட்டுக்கு முன்பு உள்ள காலி இடத்தில் புதைத்துள்ளார். இவ்வளவும் செய்துவிட்டு எதுவும் நடக்காதது போன்று இருந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழ்ககுப் பதிவு செய்து பாபுவை கைது செய்தனர். இன்று தாசில்தார் ராஜேந்திரன் முன்னிலையில் கஸ்தூரியின் உடலைத் தோண்டி எடு்தது பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications